கல்பனா சாவ்லா விருது: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு ஆா்வம் உள்ள பெண்கள் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு ஆா்வம் உள்ள பெண்கள் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகம் விடுத்துள்ள செய்தி: மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிா்கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு அவரது துறை சாா்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைக்காக கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஆா்வம் உள்ள பெண்கள் எம்ஜிஆா் விளையாட்டு மைதானத்தில் இயங்கி வரும் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், டாக்டா் எம்ஜிஆா் விளையாட்டரங்கம் என்ற முகவரிக்கு ஜூன் 20-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com