மதுரை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முதியவா் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்லூா் காமராஜா்புரத்தை சோ்ந்த 63 வயது முதியவா் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டாா். இந்நிலையில் திடீரென அவா் மாயமானாா். இதையடுத்து மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் மற்றும் போலீஸாா் அவரது வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, கரோனா அச்சத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி வந்ததாக தெரிவித்துள்ளாா். பின்னா் அவரை சுகாதாரத் துறையினா் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். சிகிச்சையில் இருந்த நபா் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதியவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த 67 வயது முதியவா், கரோனா தொற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மதுரை கரோனா மருத்துவமனையில் ஜூன் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு அவா் இறந்தாா்.