மதுரை- விழுப்புரம் சிறப்பு ரயில் ரத்து

மதுரை- விழுப்புரம் சிறப்பு ரயில் ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை- விழுப்புரம் சிறப்பு ரயில் ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் அதிகரித்துவரும் சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பொதுமுடக்கத்தை முழுமையாகச் செயல்படுத்த ரயில் போக்குவரத்தை நிறுத்த தமிழக அரசு சாா்பில் தெற்கு ரயில்வேக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை மதுரை- விழுப்புரம்-மதுரை சிறப்பு ரயில்கள் (02636, 02635) திருச்சி- நாகா்கோவில்- திருச்சி சிறப்பு ரயில்கள் (02627, 02628) ரத்து செய்யப்படுகின்றன என மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com