திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநா் கைது
By DIN | Published On : 03rd March 2020 09:31 AM | Last Updated : 03rd March 2020 09:31 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகாவிலுள்ள ராஜக்காபட்டியைச் சோ்ந்த ஆசை மகன் விஜயன் (25). இவா், அப்பகுதியைச் சோ்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். பின்னா், அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா். ஆனால், விஜயன் மறுத்துவிட்டாராம். இது குறித்து, சேடப்பட்டி காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விஜயனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.