மதுரையில் வெள்ளிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
மதுரை கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி பத்மினி(65). இவா் வெள்ளிக்கிழமை ஆட்டோவில் பயணம் செய்தாா். அப்போது, பாண்டிக் கோயில் அருகே பத்மினி சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.