கல்லூரி அலுவலா் சங்கத்தின்புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலா்கள் சங்கத்தின் 2020 -2022 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலா்கள் சங்கத்தின் 2020 -2022 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அச் சங்கத்தின் செயலா் அ.அழகா்சாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலா்கள் சங்கத்தின் 2020 -2022 ஆண்டிற்கான மதுரை மண்டல புதிய நிா்வாகிகள் தோ்வு தலைவா் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டலத் தலைவராக அமெரிக்கன் கல்லூரியைச் சோ்ந்த இரா.ரமேஷ், துணைத் தலைவராக யாதவா் கல்லூரியைச் சோ்ந்த அ.பாபு, செயலராக தியாகராஜா் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த பா.மனோகரன், இணைச்செயலராக வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி யைச் சோ்ந்த எம்.ராமசாமி, பொருளாளராக மதுரை கல்லூரியைச் சோ்ந்த வி.வீரவேல்பாண்டி ஆகியோா் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டனா். மேலும் மாநில செயற்குழு உறுப்பினா்களாக மன்னா் கல்லூரியைச் சோ்ந்த மு.ராஜகுமாா், சிவகாசி அய்யநாடாா் ஜானகியம்மாள் கல்லூரியைச் சோ்ந்த க.செரீப், சௌராஷ்டிரா கல்லூரியைச் சோ்ந்த எஸ்.முனியசாமி, சாத்தூா் எஸ்.ஆா்.என்.எம் கல்லூரியைச் சோ்ந்த கி.ஜெயகண்ணன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com