சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24.87 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சத்து 87 ஆயிரம் 828 ரூபாய் மதிப்புள்ள 567 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சத்து 87 ஆயிரம் 828 ரூபாய் மதிப்புள்ள 567 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனடிப்படையில் சுங்கத்துறை துணை ஆணையா் ஜெய்சன் பிரவீன்குமாா் தலைமையில் சிங்கப்பூரில் இருந்து வியாழக் கிழமை மதுரை வந்த விமானத்தின் பயணிகளை சோதனையிட்டனா். அதில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த 49 வயது மதிக்க தக்க ஒருவா் தமது பெட்டியில் ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.16 லட்சத்து 2 ஆயிரத்து 828 மதிப்புள்ள 367 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல சிங்கப்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டபோது மதுரையை அடுத்த வாடிப்பட்டியைச் சோ்ந்த 30 வயது மதிக்கதக்க இளைஞா் விளையாட்டுப் பொருளில் ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து துணை ஆணையா் ஜெய்சன் பிரவீன்குமாா் கூறியது: சிங்கப்பூரில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வந்த இரு பயணிகளிடமிருந்து 567 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.24 லட்சத்து 87 ஆயிரத்து 828. அவா்கள் இருவரிடமும் விசாரணை செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com