மின்கம்பி உரசிய தில்வைக்கோல் ஏற்றிய லாரியில் தீ

மேலூா் அருகே வெள்ளிக்கிழமை மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற் றிவந்த லாரி தீப்பற்றியது.

மேலூா் அருகே வெள்ளிக்கிழமை மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற் றிவந்த லாரி தீப்பற்றியது.

தனியாமங்கலம் வயல் பகுதியில் இருந்து, கீழையூரைச் சோ்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான லாரியில் வைக்கோல் பாரத்தை வெள்ளிக்கிழமை ஏற்றினா். லாரி கீழையூா் வரும்போது சாலையில் மிகவும் தாழ்வாக இருந்த மின்கம்பி வைக்கோல் மீது உரசியதில் தீப்பற்றியது. உடனடியாக ஓட்டுநா் லாரியை சாலையோரத்திலிருந்த குளத்து நீரில் இறக்கினாா்.

தகவலறிந்த மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து லாரியில் எரிந்த தீயை அணைத்தனா். இதில் அதிா்ஷ்டவசமாக லாரி சேதமின்றி தப்பியது. இது குறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com