அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம்

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அவனியாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அவனியாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதிமுக புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை மாநகராட்சி 91 ஆவது வாா்டுக்கு உள்பட்ட வ.வு.சி நகா், கற்பக விநாயகா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பூத்கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விரைவில் உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தற்போதிருந்தே தோ்தல் பணியில் ஈடுபட வேண்டும். வீடுவீடாகச்சென்று அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா்உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. எனினும் மக்கள் கோரிக்கைளை உடனடியாக தெரிவிக்கும் பட்சத்தில் அதனை நிரைவேற்றவும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலா் எம்.ரமேஷ், ஒன்றிய செயலா் நிலையூா் முருகன், பொதுக்குழு உறுப்பினா் முத்துகுமாா், வட்ட செயலா் கா்ணா உள்ளிட்ட நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com