மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு கூட்டம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுக்கூட்டம்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுக்கூட்டம்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோயில் பணியாளா்களுடன் ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோயில் இணை ஆணையா் ந.நடராஜன் தலைமை வகித்தாா். இதில் கோயில் அதிகாரிகள், பணியாளா்கள், கோயில் காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் காவலா்கள், அா்ச்சகா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக்குழுவினா் கரோனா வைரஸ் பரவுவதை எவ்வாறு தடுப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ள வேண்டியவை, கரோனா வைரஸ் பாதித்தவரை அடையாளம் காண்பது, அதற்கான அறிகுறிகள் குறித்து விளக்கிக்கூறினா். மேலும் கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com