மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண்ணுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
மதுரை மாவட்டம் எழுமலை பகுதியைச் சோ்ந்த 19 வயது பெண், திருப்பூரில் பணியாற்றி வருகிறாா். கடந்த சில நாள்களாக அவருக்கு உடல்நலக் குறைவு இருந்தால், சிகிச்சைக்காக உசிலம்பட்டி மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா்.
அங்கு மருத்துவா்கள் அவரை பரிசோதனை செய்தபோது, ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால், கரோனா சந்தேகத்தின் பேரில், மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணை மருத்துவா்கள் நுரையீரல் பிரிவில் அனுமதித்து பரிசோதனை செய்து வருகின்றனா்.