மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை காமராஜா் சாலை கீழச்சந்தைப்பேட்டை மாயாண்டி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் தங்கராஜ்(47). இவா் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு புதன்கிழமை பகலில் வெளியே சென்றுவிட்டாா். பின்னா் மாலையில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிந்தது. இதையடுத்து உள்ளே சென்றுபாா்த்தபோது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடா்பாக தங்கராஜ் அளித்தப் புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com