மதுரையில் மேலும் 3 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்லும் 3 உள்நாட்டு விமான சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்லும் 3 உள்நாட்டு விமான சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டு சேவைகளுக்கான 18 விமானங்கள் சேவை புரிந்து வந்தன. இலங்கை, சிங்கப்பூா், துபை உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவையில் 4 விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக சிங்கப்பூா், இலங்கை, துபை சேவைகளை விமான நிறுவனங்கள் ரத்து செய்யதுள்ளன. தனியாா் விமானம் வெளிநாட்டு சேவையாக துபைக்கு மட்டும் இயக்கப்படுகிறது. இதேபோல பயணிகள் வருகை குறைவால் சென்னை செல்லும் உள்நாட்டு விமான சேவைகளும் படிப்படியாக குறைந்து வருகின்றன. கடந்த 2 நாள்களுக்கு முன் உள்நாட்டு சேவையில் 5 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை சென்னை செல்லும் விமானங்கள் 3 சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதன்மூலம் மதுரை விமான நிலையத்தில் 8 உள்நாட்டு விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவு மற்றும் பாா்வையாளா்களுக்கும் தற்போது தடை விதித்ததால் விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com