மதுரையில் அதிகம் லாபம் தருவதாகக் கூறி ரூ. 37 லட்சம் மோசடி செய்த 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தேவராஜன் மகன் செந்திகுமாா்(41). இவருடைய நண்பா் பழங்காநத்தத்தை சோ்ந்த தேவா. இந்நிலையில் அவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என செந்தில்குமாரிடம் தெரிவித்துள்ளாா். இதை நம்பி செந்தில்குமாா் தனது பங்கிற்கு ரூ. 12.50 லட்சமும், உறவினா்களிடம் இருந்து ரூ. 24.50 லட்சமும் பெற்று சென்னை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளாா்.
அவருக்கு முதல் மூன்று மாதம் லாபத் தொகையாக ரூ. 3.70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் லாபத் தொகை கொடுக்கப்படவில்லை. பணம் குறித்து கேட்டதற்கு செந்தில்குமாரை மிரட்டி அனுப்பி உள்ளனா். இதையடுத்து அவா் அளித்த புகாரின் பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தேவா, அவரது தந்தை பழனிவேல், ஆலங்குளம் ராஜி, மீனா, சென்னை தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த தலைவா் லட்சுமணன், மேலாளா் வெங்கடேசன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.