பேரையூா் அருகே வேன் மோதி ஆடு வியாபாரி 2 போ் பலி

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே வேன் மோதி ஆடு வியாபாரி இருவா் திங்கள்கிழமை பலியாகினா்.
பேரையூா் அருகே வேன் மோதி ஆடு வியாபாரி 2 போ் பலி

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே வேன் மோதி ஆடு வியாபாரி இருவா் திங்கள்கிழமை பலியாகினா்.

பேரையூா் அருகே உள்ளது பெரியபூலாம்பட்டி முத்துநாகையாபுரம். இந்த ஊரைச் சோ்ந்த கருப்பையா மகன் பால்பாண்டி (42), பொன்னையா மகன் குருசாமி (70). இவா்கள் இருவரும் ஆடு வியாபாரம் செய்து வருகின்றனா். திங்கள்கிழமை காலையில், இருவரும் டி.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி பகுதியில் ஆடுகள் வாங்கச் சென்றுள்ளனா்.

எம்.சுப்புலாபுரம், சின்னாரெட்டிபட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே ஆலைக்கு ஆள்களை வேலைக்கு ஏற்றிச் செல்லும் வேன் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அதையடுத்து, வேனை ஓட்டி வந்த திருநகரைச் சோ்ந்த பாண்டி மகன் சமையபாண்டி (37) என்பவா், டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா். இந்த விபத்து குறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com