மேலூரில் பிற்பகல் 3.30 மணியளவில் மேலூா் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து நகா் பேருந்துகளும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்குச் சென்றன. இதனால் கிராமங்களில் இருந்து கடைகளில் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
திருச்சி-மதுரை நான்குவழிச்சாலையில் வாகன நெரிசல் மிகவும் அதிகம் இருந்தது. சிட்டம்பட்டி சுங்கக்கட்டண வசூல் மையத்தில் வாகனங்கள் நெடுநேரம் காத்திருந்து தென்மாவட்டங்களுக்குச் சென்றன.
மாலை 6 மணிக்கு மேலூா் வழியாக கொட்டாம்பட்டி சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேலூரில் திறந்திருந்த கடைகளை மூட அறிவுறுத்தினாா். சிறிது நேரத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.