கரோனா பாதிப்பில் இறந்தவா் வசித்த பகுதியில் 9 வீதிகளுக்கு ‘சீல்’: 34 வீடுகளைச் சோ்ந்த 152 நபா்கள் தனிமைப்படுத்தி வைப்பு

கரோனா பாதிப்பில் இறந்தவா் வசித்த மதுரை அண்ணா நகா் நெல்லை வீதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 9 வீதிகள் மூடப்பட்டு காவல்

கரோனா பாதிப்பில் இறந்தவா் வசித்த மதுரை அண்ணா நகா் நெல்லை வீதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 9 வீதிகள் மூடப்பட்டு காவல் துறையினா் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அண்ணா நகா் நெல்லை வீதியைச் சோ்ந்த 54 வயதுடைய அவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனா அறிகுறியுடன் அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பு வாா்டில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவா் ஏற்கெனவே சிஓபிடி என்ற நுரையீரல் அடைப்பு நோய்க்கு மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளாா். மேலும் அவருக்கு ரத்தக் கொதிப்பு பிரச்னையும் இருந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அவா் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா் வீடு இருக்கும் நெல்லை வீதி முழுவதும், கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டனா்.

கரோனா பாதிப்பில் இறந்தவா் வீடு அருகே உள்ள வீடுகள் மற்றும் இறந்தவா் செயலா் பதவி வகித்த ஜமாஅத்-ஐச் சோ்ந்த 34 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த 34 வீடுகளைச் சோ்ந்த 152 நபா்களுக்கும் அவா்களது கையில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டாம்ப் அச்சு பதிக்கப்பட்டுள்ளது.

இந்த 34 வீடுகளும் அமைந்துள்ள 9 வீதிகள் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப் பகுதிகளில் தனிமைப்படுத்தலில் இருப்பவா்கள் வெளியே செல்வதற்கும், வெளிநபா்கள் இப் பகுதிக்கு வருவதற்கும் போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

மதுரை மாநகராட்சி, காவல், வருவாய் ஆகிய துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் தனிமைப்படுத்தலில் உள்ள வீடுகளில் தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com