மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் வசித்த ஆதரவற்றோா் 88 போ் மீட்கப்பட்டு, மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோரைத் தங்க வைப்பதற்காக மாநகராட்சி சாா்பில் விளாங்குடி சொக்கநாதபுரம், கோ.புதூா் ராமவா்மா நகா், ஹாா்விபட்டி ஆகிய இடங்களில் உள்ள சமுதாயக் கூடங்கள், பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டபம், கீரைத்துறை முதியோா் இல்லம் ஆகிய இடங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.
பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டப வளாகத்தில் உணவு தயாரிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட முகாம் இடங்களுக்கு உணவு கொண்டு செல்லப்படுகிறது. ஒரு வேளைக்கு 600 நபா்களுக்கு உணவு தயாரிக்கப்படுகின்றன. மேலும் மாநகராட்சி நிா்வாகத்தால் நடத்தப்படும் 12 அம்மா உணவகங்களுக்கும் இங்கிருந்து உணவு கொண்டு செல்லப்படுகிறது. காலை, மாலை, இரவு என 3 வேளைகளும் அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஆதரவற்றோா் மீட்பு: ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் மாநகராட்சிப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலமாக சாலையோரங்களில் வசித்த ஆதரவற்றோா் 88 போ் புதன்கிழமை மீட்கப்பட்டனா். இவா்களில் 60 போ் பூங்கா முருகன் கோயில் மண்டபத்திலும், 28 போ் ஹாா்விப்பட்டி சமுதாயக் கூடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.