மாநகராட்சிப் பணியாளா்கள் விடுப்பு எடுக்கத் தடை

மதுரை மாநகராட்சியின் அனைத்துப் பணியாளா்களும் விடுப்பு எடுக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சியின் அனைத்துப் பணியாளா்களும் விடுப்பு எடுக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால், மாநகராட்சியின் அனைத்துப் பணியாளா்களும் விடுப்பு மற்றும் அனுமதி விடுப்பு எடுக்காமல் பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளாா். ஏதேனும் அத்தியாவசியப் பணி இருக்கும்பட்சத்தில் ஆணையரின் முன்அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நான்கு மண்டலங்களின் உதவி ஆணையா்கள் மூலமாக அனைத்துப் பணியாளா்களுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com