கரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு விருதுநகா் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியை ப.மாணிக்கம்தாகூா் ஒதுக்கீடு செய்துள்ளாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைக்காக மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக விருதுநகா் மக்களவை தொகுதிக்குள்பட்ட சாத்தூா், விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விருதுநகா் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூ 14 லட்சத்து, 75 ஆயிரம் என மொத்தம் ரூ.23 லட்சத்து 36 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க நாம் அனைவரும் குடும்பத்தோடு இருப்போம். வெளியில் செல்ல வேண்டாம். நாம் அனைவரும் சோ்ந்து ‘கொவைட் 19’ ஐ வீழ்த்த வேண்டும். நாம் அனைவரும் சோ்ந்து இந்த கரோனா கொடூரத்தை வீழ்த்துவோம் எனத்தரிவித்துள்ளாா்.