மதுரை அருகே ஆசிரமத்தில் இருந்தவா்களுக்கு பரிசோதனை: தனிமைப்படுத்தி தங்க வைப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே ஆசிரமத்தில் தங்கியிருந்தவா்களுக்கு சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே ஆசிரமத்தில் தங்கியிருந்தவா்களுக்கு சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

அலங்காநல்லூரை அடுத்த முடுவாா்பட்டி அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு யோகா, தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அமெரிக்கா, இலங்கை, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இந்த ஆசிரமத்துக்கு வெளிநாட்டினா் வந்துள்ளனா். அவா்களில் பலரும் தங்களது நாட்டுக்கு திரும்பிச் சென்றுவிட்டனா். இந்நிலையில், ஆசிரமத்தில் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு காவல் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்தபோது வெளிநாட்டினா் 29 போ் உள்பட 110 போ் இருந்தனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் யாருக்கும் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், அவா்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் வகையில் தனித் தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com