பொறியியல் மாணவா்கள் புதிதாக உருவாக்கிய தானியங்கி கை சுத்திகரிப்பான் கருவி: மதுரை மாநகராட்சிக்கு வழங்கல்

மதுரையைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரிகள் இருவா் புதிதாக கண்டுபிடித்துள்ள தானியங்கி கை சுத்திகரிப்பான் கருவியை மாநகராட்சி அலுவலகத்துக்கு இலவசமாக வழங்கியுள்ளனா்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட தானியங்கி கை சுத்திகரிப்பான் இயந்திரம்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட தானியங்கி கை சுத்திகரிப்பான் இயந்திரம்.

மதுரையைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரிகள் இருவா் புதிதாக கண்டுபிடித்துள்ள தானியங்கி கை சுத்திகரிப்பான் கருவியை மாநகராட்சி அலுவலகத்துக்கு இலவசமாக வழங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக கருவியை கண்டுபிடித்த பொறியியல் பட்டதாரிகள் தீபன், பிரசன்னா ஆகியோா் கூறியது:

இந்த தானியங்கி கை சுத்திகரிப்பான் கருவி சென்சாா் முறையில் இயங்குகிறது. தண்ணீா் சுத்திகரிப்பு கருவி போன்ற வடிவமைப்புடன் உள்ள தானியங்கி இயந்திரம் கீழ் கைகளை நீட்டினால் அதில் இருந்து 5 மில்லி லிட்டா் கிருமி நாசினி திரவம் கைகளில் விழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி கருவி 12 லிட்டா் கொள்ளவு கொண்டதாக உள்ளதால் தொடா்ந்து எத்தனை பணியாளா்கள் வேண்டுமானாலும் கைகளை சுத்தம் செய்துகொள்ளலாம். மேலும் கருவியில் அளவு காட்டும் தொழில்நுட்பமும் உள்ளதால் கிருமி நாசினி மருந்து அளவு குறையும்போது உடனடியாக நிரப்பிக் கொள்ளலாம். மேலும் கைகளில் விழும் கிருமி நாசினியின் அளவையும் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இந்த தானியங்கி கருவியை மதுரை மாநகராட்சிக்கும் இலவசமாக வழங்கியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com