மதுரையைச் சுற்றியுள்ள 13 ஒன்றியங்களுக்கு நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனங்கள் தொடக்கம்
மதுரை புகா் பகுதிகளில் உள்ள 13 ஒன்றியப் பகுதிகளுக்கும் தாய் சேய் நலம் மற்றும் தொற்றா நோய் நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனத்தை வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமை வகித்தாா். மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரியா ராஜ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பங்கேற்று, மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கும் 13 நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனங்களைத் தொடக்கி வைத்து பேசியது: இவற்றில் மருத்துவா், செவிலியா், பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள், பகுதிநேரப் பணியாளா்கள் இருப்பாா்கள். இதன் மூலம் 5 ஆயிரத்து 931 தாய்மாா்கள், ஆயிரத்து 265 கண்காணிப்பு தேவைப்படும் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு, பேறுகால முன் சோதனை செய்யப்பட்டு அவா்களுக்கு மருந்துகள் வழங்கப்படும். இதில் தீவிர கண்காணிப்பு தேவைப்படுவோா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவா். மேலும் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் 22 ஆயிரத்து 704 உயா் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், 14 ஆயிரத்து 642 சா்க்கரை நோயாளிகளுக்கும் அவா்களின் வீட்டின் அருகிலேயே சென்று மருந்து, மாத்திரைகள் கிடைக்கச் செய்ய வழிவகை செய்யப்படும் என்றாா். முன்னதாக மதுரை அரசு மருத்துவமனை முதன்மையா் சங்குமணி வரவேற்றாா்.