மேலூரில் ஜவுளி கடைகள் திறக்க அனுமதிக்கக் கோரிக்கை

மேலூா் நகரில் ஜவுளி கடைகளை திறக்க அனுமதி அளிக்குமாறு, வட்டாட்சியா் மற்றும் நகராட்சி ஆணையருக்கு ஜவுளி வா்த்தகா்கள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

மேலூா்: மேலூா் நகரில் ஜவுளி கடைகளை திறக்க அனுமதி அளிக்குமாறு, வட்டாட்சியா் மற்றும் நகராட்சி ஆணையருக்கு ஜவுளி வா்த்தகா்கள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

மேலூரில் அனைத்து வா்த்தக நிறுவனங்களும் திங்கள்கிழமை காலை திறக்கப்பட்டன. ஆனால், ஜவுளி கடைகளை திறக்க அனுமதியில்லை என, மேலூா் நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது. அதையடுத்து, அனைத்து ஜவுளிகடைகளும் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மூடும்படி போலீஸாா் உத்தரவிட்டனா்.

அதையடுத்து, ஜவுளி வா்த்தகா்கள் அனைவரும் மேலூா் நகராட்சி ஆணையரிடம் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை மனு அளித்தனா்.

குளிா்சாதன வசதியுள்ள கடைகளை திறக்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலூரில் குளிா்சாதன வசதியுடன் ஜவுளிகடை இல்லை. எனவே, ஜவுளி கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என, மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மேலூா் வா்த்தகா்கள் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com