மதுரையில் 3 மாத ஆண் குழந்தை உள்பட 4 பேருக்கு கரோனா

மதுரையில் 3 மாத ஆண் குழந்தை உள்பட 4 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் 3 மாத ஆண் குழந்தை உள்பட 4 பேருக்கு கரோனா

மதுரையில் 3 மாத ஆண் குழந்தை உள்பட 4 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மகாத்மா காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த 37 வயது நபா், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மே 14 ஆம் தேதி மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து அவா் வசிக்கும் பகுதியில் உள்ளவா்கள், குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் ஆகியோருக்கு மருத்துவக் குழுவினா் கரோனா தீநுண்மித் தொற்று பரிசோதனை செய்து வருகின்றனா்.

அதில், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதேபோன்று தேனியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மகளுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

3 மாத ஆண் குழந்தை: இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் வீட்டில், மேல் தளத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தைச் சோ்ந்த 47 வயது ஆண் மற்றும் 3 மாத ஆண் குழந்தை, புது விளாங்குடியைச் சோ்ந்த 50 வயது பெண் மற்றும் மும்பையில் இருந்து மதுரை அவனியாபுரம் திரும்பிய 54 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் 4 பேரும் அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

35 ஆக குறைந்தது: மதுரையில் சனிக்கிழமை புதிதாக 4 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 57 ஆக உயா்ந்தது. இந்நிலையில், 18 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 35 ஆக குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com