அா்ஜூனா, துரோணாச்சாா்யா விருதுகள்: மே 21-க்குள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவா்கள் அா்ஜூனா, துரோணாச்சாா்யா உள்ளிட்ட விருதுகளுக்கு மே 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவா்கள் அா்ஜூனா, துரோணாச்சாா்யா உள்ளிட்ட விருதுகளுக்கு மே 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகம் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது: விளையாட்டுத்துறையில் நாட்டுக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டு தொடா்புடையவா்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகள் அரசு சாா்பில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டில்(2020) ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அா்ஜூனா விருது, துரோணாச்சாா்யா விருது, தயான்சந்த் விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருது ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உரையின் மேல் சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்களை மே 26-ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்து சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்ப வேண்டியுள்ளதால், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதுரை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலகத்தில் மே 21-க்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com