மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிறப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு ஒன்றிய பெருந்தலைவா் ரஞ்சனி சுதந்திரம் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் ஜெயராமன், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில் துணைத் தலைவா் மலேசியா பாண்டி, மற்றும் 11 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். அதில் ரூ 1 கோடியே 2 லட்சம் செலவில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒரு மனதாக 28 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.