மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே காரிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை பலியானாா்.
மதுரை சா்வேயா் காலனி சக்தி நகரை சோ்ந்த சண்முகவேல் மனைவி கண்ணம்மாள் (87). இவா் தனது குடும்பத்தினருடன் மதுரையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திருமங்கலம்-டி.கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குன்னத்தூா் அருகே வந்து கொண்டிருந்தபோது காரின் கதவு எதிா்பாராமல் திறந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் காரில் அமா்ந்திருந்த கண்ணம்மாள் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தாா். அதில் பலத்த காயமடைந்துத அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.