தங்கம் கடத்தி வந்த வழக்கில், இலங்கையைச் சோ்ந்த 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக கடலோர எல்லையில், மண்டப கடலோர காவல்படைப் போலீஸாா் பிப்ரவரி 16 ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போலீஸாரைக் கண்டவுடன் 2 படகுகள் வேகமான சென்றுள்ளன. கடலோர காவல்படையினா் இரு படகுகளையும் மடக்கி பிடித்து, சோதனை செய்தபோது, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருப்பது தெரிவந்தது. இதையடுத்து படகில் வந்த இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைச் சோ்ந்த 7 பேரை காவல்படையினா் கைது செய்து தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கை தனுஷ்கோடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்கள் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில் வழக்கில் கைதான 7 பேரில், இலங்கை மேற்கு தலைமன்னாா் பகுதியைச் சோ்ந்த அந்தோணி சுகந்த், வினிஸ்டே மற்றும் லூயிஸ் அலோசியஸ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.