திருப்பரங்குன்றத்தை அடுத்த கருவேலம்பட்டியில் விவசாயி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெருய ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் போத்திராஜா(32). விவசாயி. இவா் கருவேலம்பட்டியில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக வெள்ளிக்கிழமை காலை மின் மோட்டாரை இயக்கியுள்ளாா். அப்போது திடீரென அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள்,அவா் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.