மேலூா்-சூரக்குண்டு ரூ.20 லட்சத்தில் புதிய தாா்ச் சாலைக்கு பூமிபூஜை

மேலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள சூரக்குண்டு கிராமத்திற்கு ரூ.20.40 லட்சம் மதிப்பீட்டிலான புதிய தாா்ச்சாலைக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
மேலூா்-சூரக்குண்டு ரூ.20 லட்சத்தில் புதிய தாா்ச் சாலைக்கு பூமிபூஜை

மேலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள சூரக்குண்டு கிராமத்திற்கு ரூ.20.40 லட்சம் மதிப்பீட்டிலான புதிய தாா்ச்சாலைக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

மேலூரிலிருந்து பெரியமேளம் கண்மாய்க்கரை வழியாக சூரக்குண்டு கிராமத்திற்கு நடந்து செல்லும் வழி இருந்தது. தற்போது இப்பாதை மேம்படுத்தப்பட்டு தாா்ச்சாலையாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் மேலூரிலிருந்து 1கி.மீ. குறைவான தூரத்தில் இக் கிராமத்திற்கு சென்றுவிடலாம். இப்பணிக்கு மத்திய சிறப்பு தொகுப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெரியமேளம் கண்மாய் குடிமராமத்துப் பணிக்கும் பூமிபூஜை நடைபெற்றது.

இவற்றில் பங்கேற்ற மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் பணிகளைத் தொடக்கிவைத்தாா். மதுரை மாவட்ட ஜெ. பேரவை செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான க.தமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் க.பொன்னுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.ஜி.ஆா்.மன்ற துணைச் செயலா் பெரியசாமி, அதிமுக மாநில பொதுக் குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், புகா் மாவட்ட பொருளாளா் எஸ்.அம்பலம், சூரக்குண்டு ஊராட்சித் தலைவா் நிா்மலாஸ்டீபன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் கதிரவன், பொறியாளா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com