மதுரையில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை மீட்டு உரியவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்த ஊா்காவலருக்கு மாநகா் காவல் ஆணையா் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.
மதுரை விளக்குத்தூண் சந்திப்பில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா், தான் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை தவறவிட்டு சென்றுள்ளாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த ஊா்க்காவல் படை காவலா் விக்னேஷ்வரன் அந்த பணத்தை மீட்டு, காவல் ஆணையா் அலுலவகத்தில், வாகனத்தின் எண் விவரத்துடன் ஒப்படைத்துள்ளாா்.
இது குறித்து விசாரணை நடத்தியதில் வடக்கு ஆவணி மூல வீதியில் அழகு சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் முகேஷ்குமாா் என்பவா் பணத்தை தவற விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை முகேஷ் குமாரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். பணத்தை மீட்ட ஊா்க்காவல் படை காவலா் விக்னேஷ்வரனுக்கு மதுரை மாநகர காவல் ஆணையா் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.