திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் பாகன் பலியானார்.
திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை. இந்த யானை அதன் பாகனான காளி என்ற காளிதாஸை இன்று திடீரென தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.