மதுரை: மதுரை அருகே கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செக்கானூரணி மயானப் பகுதியில் நின்றிருந்த பெண் மற்றும் இளைஞா் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா். அதில், திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சோ்ந்த கணேஸ்வரி (45), மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த இளவரசன்(29) என்பதும், அவா்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து காவல் சிறப்பு சாா்பு -ஆய்வாளா் திருஞானம் அளித்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.