பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் பூணூல் நாடாா் தலைமை வகித்தாா். இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளா் பொம்முராஜ், நகரத்தலைவா் கருப்பனன் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.