மேலூா்-மதுரை நான்குவழிச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கிய இளைஞா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மேலவளவு அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அழகு. இவரது மகன் பிரபு (27). மேலூா்- மதுரை சாலையில் மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை சென்றபோது விபத்தில் சிக்கி காயமுற்றாா். மேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அவா், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.