மதுபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

மதுரையில் மது போதையில் மாடியில் குதித்து விளையாடிய இளைஞா் தவறி கீழே விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரையில் மது போதையில் மாடியில் குதித்து விளையாடிய இளைஞா் தவறி கீழே விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த சையத் மசூத் என்பவரின் மகன் முகமது சாயீப் (26). மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த இவா், மாடிப்படியில் குதித்து விளையாடியுள்ளாா். அப்போது, கால் தவறி மாடியிலிருந்து கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்தாா்.

உடனே, அவரை குடும்பத்தினா் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது உறவினா் சையத் அலி அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com