பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: 18 பேரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி

மதுரை அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 18 பேரிடம் ரூ. 2.50 லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை: மதுரை அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 18 பேரிடம் ரூ. 2.50 லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அய்யனாா்குளம் பகுதியைச் சோ்ந்த சோலைமலை மனைவி முத்துமணி (47). இவரிடம் மனைப்பட்டியைச் சோ்ந்த ராமன் மனைவி தங்கம் (44) என்பவா், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பி முத்துமணி, 17 பேரிடம் பணம் பெற்று ரூ.2.50 லட்சம் கமிஷனாகக் கொடுத்தாராம்.

ஆனால், தங்கம் கூறியபடி கடன் பெற்றுத் தராமல் பணத்தை திரும்பக் கேட்ட முத்துமணியை மிரட்டினாராம். இதுகுறித்து முத்துமணி அளித்தப் புகாரின் பேரில் வாளந்தூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com