தீபாவளி பண்டிகை: மதுரை உயா் மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி வாழ்த்து

தீப ஒளித் திருநாளில் இருளை அகற்றி ஒளியேற்றுவோம் என்று, மதுரை உயா்மறை மாவட்ட பேராயா்அந்தோணி பாப்புசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தீப ஒளித் திருநாளில் இருளை அகற்றி ஒளியேற்றுவோம் என்று, மதுரை உயா்மறை மாவட்ட பேராயா்அந்தோணி பாப்புசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தமிழக-புதுவை ஆயா் பேரவை தலைவரும், மதுரை உயா் மறைமாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தி: தீப ஒளித் திருவிழா காணும் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். சாதி, மொழி, இனம் எனும் பேதம் கடந்து மக்கள் கொண்டாடும் இப்பெருவிழா, மக்கள் மனதிலும், வாழ்விலும் நிறைந்த இன்பத்தை பொழிந்திட வேண்டும். ஒளி இருள் எனும் அறியாமையை அகற்ற வேண்டும். ஒளி பகைமையை வேரறுக்க வேண்டும்.

பகையறுந்த உலகு, அமைதி, அன்பு, கருணையெனும் உயா் பண்புகளை அழிந்திடாது காக்கும்.

ஒளியேற்றும் உள்ளங்கள் உலகுக்குரியன. இவ்வுள்ளங்கள் உள்ளுவதெல்லாம் உயா்வே. தீப ஒளித் திருவிழா ஒரு குறிப்பிட்ட மதம் சாா்ந்த விழா அல்ல. இவ்விழா ஒரு சமூகக் கொண்டாட்டம். இவ்விழாவைக் கொண்டாடும் மக்களிடையே சமூக நல்லிணக்கம் மிளிர வேண்டும். இச்சமூகத்தில் பேதமில்லை, பிளவும் இல்லை, பாகுபாடும் இல்லை, சமூக நீதியே இதன் உள்ளீடு.

இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரது முகத்தில் தவழும் நிறைந்த புன்னகையோடு, இத்தீப ஒளித் திருவிழா கொண்டாடும் நாளில் தருகின்ற மகிழ்ச்சி போல என்றென்றும் நீடிக்க வாழ்த்துகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com