மகாவீரா் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மகாவீரா் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனை மற்றும் ஆடு, மாடு வதை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் தடையை மீறி ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது, இறைச்சி விற்பனை செய்வது போன்றவை நடைபெற்றால், இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்பூா்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றாா்.