மதுரையில் மேலும் 46 பேருக்கு கரோனா

மதுரையில் மேலும் 46 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரையில் மேலும் 46 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 1,939 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 46 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

42 போ் குணமடைந்தனா்.

மதுரையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 42 போ் குணமடைந்தனா். அவா்கள் தங்களது வீடுகளில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிகிச்சையில் 406 போ்

மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனா தீநுண்மித் தொற்றால் 19,426 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 426 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 18,414 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 406 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com