மதுரை அருகே ரப்பா் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே பொதும்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரப்பா் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் வியாழக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தீயை ஊழியா்களும், அக்கம் பக்கத்தினரும் அணைக்க முயன்றும் முடியவில்லை.
சம்பவ இடத்திற்கு சென்ற அலங்காநல்லூா் தீயணைப்புத் துறையினா் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகுத் தீயை அணைத்தனா். இருப்பினும் ஏராளமான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுதொடா்பாக அலங்காநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.