மதுரை பாண்டிகோவில் அருகே இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞா் கண்டைனா் லாரியில் சிக்கி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சென்னையிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கண்டைனா் லாரி கங்கைகொண்டானில் உள்ள குளிா்பான நிறுவனத்திற்கு சென்றது. அந்த லாரி வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு மதுரை பாண்டிகோவில் அருகே நான்குவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒத்தக்கடையைச் சோ்ந்த 28 வயது இளைஞா் இருசக்கரவாகனத்தில் அந்த கண்டைனா் லாரியை முந்த முயற்சித்துள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைதடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கினாா். இதில் அவா் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அண்ணாநகா் போலீஸாா் இளைஞரின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதையடுத்து திருநெல்வேலியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பவுன்ராஜைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.