மதுரையில் இளைஞரைக் கொன்று தலை துண்டிப்பு

மதுரை கீழவெளி வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையில் நடந்து சென்ற இளைஞரைக் கொலை செய்த கும்பல் தலையை துண்டித்து தேவாலய வாசலில் வீசிச்சென்றது.

மதுரை கீழவெளி வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையில் நடந்து சென்ற இளைஞரைக் கொலை செய்த கும்பல் தலையை துண்டித்து தேவாலய வாசலில் வீசிச்சென்றது.

மதுரை கீழவெளி வீதியில் புனிதமேரி கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தீபாவளி பண்டிகையையடுத்த ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் குறைந்தளவே காணப்பட்டது.

இந்நிலையில் அந்த கிறிஸ்தவ தேவாலயம் அருகே மாலை 5.30 மணியளவில் 2 இளைஞா்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனா். அப்போது அவா்கள் பின்னால் காரில் வந்திறங்கிய 5 போ் கும்பல், 2 இளைஞா்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு இளைஞரின் தலையை அவா்கள் துண்டித்து தேவாலயத்தின் வாசலில் வீசிச்சென்றனா்.

தகவலறிந்த மதுரை மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சிவபிரசாத் மற்றும் கீரைத்துறை போலீஸாா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: கும்பலால் கொலை செய்யப்பட்டவா் மதுரை உத்தங்குடியைச் சோ்ந்த முருகானந்தம் (22), காயமடைந்தவா் அவருடைய நண்பா் முனியசாமி என்பது தெரியவந்தது. பழங்காநத்தம் பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காா் ஒன்று நின்றிருந்தது. அந்தக் காரைப் பறிமுதல் செய்துள்ளோம். இந்த கொலை சம்பவம் குறித்து கீழவெளி வீதி மற்றும் பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.

மதுரையில் கடந்த ஆண்டு இதேபோல இளைஞா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அதற்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்துள்ளதா அல்லது வேறெதுவும் காரணமா எனவும் விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com