திருப்பரங்குன்றம்: அவனியாபுரத்தில் அதிமுக புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அவனியாபுரத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலரும், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்துப் பேசினாா்.
கூட்டத்தில், இளைஞரணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், மாவட்ட துணைச் செயலா் முத்துக்குமாா், பகுதிச் செயலா் முருகேசன், துணைச் செயலா் செல்வகுமாா், முன்னாள் பகுதிச் செயலா் ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.