இளைஞா் தலை துண்டித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

மதுரையில் இளைஞா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

மதுரையில் இளைஞா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்த முருகானந்தம் மற்றும் மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த முனியசாமி ஆகிய 2 இளைஞா்களை கீழவெளி வீதியில் உள்ள தேவாலயம் அருகே ஞாயிற்றுக்கிழமை 4 போ் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது.

இதில் கமுதியைச் சோ்ந்த முருகானந்தம், தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். வெட்டுக் காயங்களுடன் தப்பிய காமராஜபுரத்தைச் சோ்ந்த முனியசாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

குற்றவாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், கொலையில் தொடா்புடையவா்கள் என முனியசாமி (22), நல்லமுருகன் (19) மற்றும் ஒரு சிறுவன் என 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். தனிப்படை போலீஸாா் மேலும் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com