நெய்வேலியில் வியாபாரி உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கள ஆய்வின் அறிக்கையை அவ்வமைப்பின் செயல் இயக்குநரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:
கடலூா் மாவட்டம் நெய்வேலி ஸ்ரீசக்தி நகா் பகுதியைச் சோ்ந்த வியாபாரி செல்வமுருகன் (38). அவா் குடியிருந்த பகுதியில் சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்டிருந்த கற்களைஅகற்றக் கோரியதில், செல்வமுருகனுக்கும் ஒப்பந்ததாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடா்பாக நெய்வேலி காவல் நிலையத்தில் செல்வமுருகன் புகாா் அளித்துள்ளாா். கடந்த அக்டோபா் 8 ஆம் தேதி போலீஸாா் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோது நவம்பா் 4 ஆம் தேதி உயிரிழந்தாா். செல்வமுருகன் சட்டவிரோதக் காவலில் உயிரிழந்திருப்பது களஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கில் சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும். இதில் தொடா்புடைய நெய்வேலி போலீஸாரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். செல்வமுருகனின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவி பிரேமாவுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.