மேலூா் அருகே பாா்வா்டு பிளாக் கட்சிப் பிரமுகரைக் கொலை செய்ததாக 4 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனா்.
மேலூா் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமரன். தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்துக்குச் சென்றபோது ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடா்பாக மேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்குத் தொடா்பாக வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்த விஜய்சுந்தா் (28), மதுரையைச் சோ்ந்த மாரிமுத்து (27), ஒத்தக்கடையைச் சோ்ந்த பாபு (27), ஆலாத்தூரைச் சோ்ந்த அறிவழகன் (38) ஆகியோரை தனிப்படை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.