மதுரையில் மேலும் 28 பேருக்கு கரோனா: 3 போ் பலி

மதுரை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போ் உயிரிந்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போ் உயிரிந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை 1,725 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் குணமடைந்த 44 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 72 வயது ஆண் மற்றும் 68 வயது ஆண், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 50 வயது பெண் ஆகியோா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 19,349 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 18,571 போ் குணமடைந்துள்ளனா். 432 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது, 346 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com