மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை உயா்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினா் மதுரையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை உயா்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினா் மதுரையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஏ. பாண்டி தலைமை வகித்தாா்.

பிற மாநிலங்களில் இருப்பதைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகையை குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. நாகராஜ், மாவட்ட செயலா் பி. வீரமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினா் பா. பழனியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com